Saturday, September 10, 2005

வெற்றி எங்கே.....?

வெற்றி எங்கே.....?

எங்கிருந்து வந்தது
தோல்வி.
உனக்குள் நீ..யே
போட்டதுதான் தோல்வி

மனம் என்ற கடலுக்குள்
வேதனைக்கப்பல் மூழ்கும்
போது
தோல்விப்பாதைக்குள் நீ..
கால் பதிக்கின்றாய்
அத்தோல்வியே உனக்கு
வெற்றியின் ஒளியை
மறைக்கின்றது.

தோல்வி...

முடிவுற்றது என
நிமிர்துவிடு
மீண்டும் உனைத் தொடர்ந்தாள்
தொடர்கின்றதே என
முடங்கிடாதே மானிடா....
செதுக்கிய சிற்பம்
அழிந்ததே தவிர
உன்கையில் இருக்கம்
உளி தவறவில்லையே.

சிரிப்போடு கையில் எடுக்கையில்
துணிவோடு உன் கால்கள்
வெற்றி நடைபோடும்
என்பதை உணர்வாய்.

நீதி கூறும் போது
உனக்கு புரிகின்றதோ
இல்லையோ...
நீ.. போறாடிய அனுபவம்
பேசும் போது
மானிடா என்றும்
வெற்றி மாலை உன்
கையில்.

1 comment:

Balamurali said...

நம்பிக்கையூட்டும் கவிதை!
"நீ.. போறாடிய அனுபவம்
பேசும் போது
மானிடா என்றும்
வெற்றி மாலை உன்
கையில்."
நல்ல வரிகள்.