Saturday, September 10, 2005

நடிப்பு

நடிப்பு.

நடிப்பென்னும் மேடை போட்டு
முடிச்சென்னும் கதை எழுதும்

சமுதாயமே வழி கொடு
இல்லை...வாழவிடு.

வந்ததும் கண்டேன்

ஏமாற்றும் மனிதர்களை.

இரக்கம் கொண்டதால்
பொசிக்கிவிட்டான் நம்பிக்கையை.

தன் காரியத்திற்க்காய் பின் தொடர்ந்தான்

புரியாததால் செயல் இழந்தோம்

விழுந்தான் காலில் முடித்தான்

தன் காரியத்தைகேட்டான்
யார் என்று செய் நன்றி மறந்து.
முகமூடி அணிந்து சென்று
விட்டான்கோட்டையை விட்டு.

என்னடா உலகமிது எழுந்தால்

குமுறுகின்றான்

விழுந்தால் சிரிக்கின்றான்
பணமிருந்தால் ஐயோ....அவன் பேச

மறுக்கின்றான்சபையில்

பந்தாகாட்டிசபையையே

கெடுக்கின்றான்.

நாலுபேருக்கு நடுவில் பணக்காரன் தான் என்று

புலம்புகின்றான்

குடி போதையில் ஐயே பாவம்

தொலைபேசியில் தாயவளின்
குரல்கேட்டு தொல்லை பேசி
எனதெலைபேசியை அடித்து
வைக்கின்றான்.

அட புரியவில்லை நீ தாமரை

இலை என்று.

தெரியவில்லை நீ....ஒரு

மனிதனா என்று.

No comments: