Saturday, September 10, 2005

என் சரித்திரத்தில் நீ....

என் சரித்திரத்தில் நீ....

நமக்குள் வந்த பந்தமிது
எனக்கு என்றும் வரம் கிடைத்த
சொந்தமிது

இருளுக்குள் ஒளி தரும் உறவிது
என் முடிவுக்குள் வந்த முகமிது

உனை நெருங்கவும் முடியவில்லை
உனை விடவும் முடியவில்லை
உன் முகம் மட்டும் போதும் என்றதால்
இவ்வுலகில் எதுவும் பிடிக்கவில்லை

அன்பென்ற கோட்டைக்குள் புகுந்ததாள்....
என்னுயிர் வதைத்து

உன்னுயிர் சுமக்கின்றேன்

புரியாத உலகில் பிரியாதவரம்

ஒன்றைகேட்டுத்தவிக்கின்றேன்.

இல்லையேல்…..உனை ஒருகனம்

பார்த்தால் போதும்
மறு நிமிடம் செத்து மடிந்திடுவேன்.

இதயத்தில் உன் பெயர் மட்டும்

பொறித்ததால்
உனை என் சரித்திர.....

நாயகனாக்கினேன்.

No comments: