Saturday, September 10, 2005

எங்கே....மனித நேயம்


எங்கே....மனித நேயம்

சுழன்றிடும் பூமியில்
மனிதனே எங்கே... உன் மனித நேயம்

அதர்மம் கொண்டு உலகை ஆட்டிவைத்து
மனித நேயத்தை தொலைத்து விட்டாயே.....

தர்மம் தொலைந்ததால் நிஐhயங்கள் அழிந்தன.

அறிவில்லா சிந்னைக்குள் முகம் புதைத்து
இதில் பாதையில் சிங்கார நடை.

ஊமை நெஞ்சம் உறுத்தும் போதாவது
உண்மை வழி பிறக்காதா...?

மனதில் மர்ம ஆட்டம்
இதில்வெளியில் திருமுகம்.

சந்தைக்கூட்டத்தில் வந்த மந்தை பொல்
பண்பாட்டை புதைத்து பகையை வளர்க்குதடா.

செந்தூர சொந்தம் எல்லாம் சாக்கடையானது

உறவெண்று சொல்லி உருக்குலைத்துவிட்டது

அகந்தையின் பெயரால்
வீழ்ச்சி செய்யும் மனிதனைநினைக்கையில்
உள்ளம் கோதுதடா.

நீதி எங்கே..கருணை எங்கே...நேர்மை எங்கே..

கடமை எங்கே...காதல் எங்கே....பண்பு எங்கே...பாசம் எங்கே...

போதும் மனிதா...ஆடாதே..மனிதா ஆடாதே..

மனிதநேயத்தை தொலைக்காதே...

No comments: