Saturday, September 10, 2005

வெள்ளி நிலவே முகம் காட்டு


வெள்ளி நிலவே முகம் காட்டு

வீசும் தென்றலே நான் சேர
வழி சொல்லு

உனைத்தேடுகின்றது விழிகள்

சில நிமிடம் தடைபோடுது உள்ளம்

வஞ்சமில்லா நெஞ்சு ஊமை

மொழிபேச வைத்தாய்

என் கண்கள் தடைஇன்றி

நீர் பெருகின்றது

இறைவணிடம் உயிரைக்கொடுக்க

முயன்றேன்

மறுகணம் உன் உயிருடன்

கலக்க ஏங்குகின்றேன்

உன் இதழின் அழகை சிரிப்பில்

கண்டேன்

உன் பெயரை ஏட்டினில்

எழுதியதாள்.....
விழிகள் மூட மறுக்கின்றது

உன் நினைவு பசியை

மறைக்கின்றது

ஓடும் நதியல் உன் முகம்

பார்த்தேன்

அள்ளிப்பருகையில் நீ.....தவறியது

ஏனோ.....?

உனை இதயத்தில் சுமந்ததால்
நான் வறண்டகுளத்தில்

வாடியதாமரைஆனேன்

நீ பக்கம் வந்தால் போதும்...

உனக்கு நான் செந்தாமரையாவேன்...

----- ----- ------

தொடுப்புகள் [ LINKS ]
---------------------------

யாழ் கவி

தமிழ் மணம்

இலங்கை வானொலி நினைவலைகள்

நிலா எப்.எம்





No comments: