Saturday, September 10, 2005

இதமான ராகங்கள்


இதமான ராகங்கள்

என் முன் தெரிகின்ற வான் முழுதும்
உன் குரல் கேட்கின்றது

நிலவினிலே பனித்துளிகள் சொட்டுப்போட
ஒரு துளியில் உன் இருவிழி கண்டேன்

கடல் அலைகள் உலகெங்கும் சத்தமிட
ஒருங்கமைந்த ஓசையில்
சங்கமித்ததுஉன் குரல்

என் இயல்பை நான் பாடுகின்றேன்

இதோ....இந்த நிலாவில் வாழைக்குருத்தில்
மழைத்துளியின்இதமான சத்தம் போல்
சுகமான ராகங்கள் எனைத்தாலட்டுகின்றன

No comments: