Friday, September 09, 2005

மனிதனின் மறு பக்கம்

நீ நாகமா......

இல்லை நாரையா....

கொடுப்பவனா இல்லை குடி கெடுப்பவனா...

வம்சா வழியா இல்லைஅகிம்சை வழியா...

திருந்தியவனா இல்லை நீ..திருடனா..

உன் வாய்க்குள் வைரஸ்சாஇல்லை தேனா.....

குடும்பத்தை காப்பவனாஇல்லை கூட்டிக் கொடுப்பவனா.....

படித்தவனா இல்லை படிக்காத முட்டாளா..

வீட்டுப் படி ஏறியவனா
இல்லைபடிகளை மடியாக்கியவனா...

.நம்பியவனா இல்லை
நம்பிக்கை துரோகியா....

பாதையில் பாதகனாகி
முட்களைத் தூவியவனே

கொடியவனே கொடூரமானவனே

கொடூரமான வார்த்தையால்
தேள் போல் கொட்டியவனே

உன் வார்த்தைகள்
என் இதயத்தை கிழித்துவிட்ட போது

ஆறாத றணமாயின

நீ….நீஅழியும்வரை நான் உறங்கேன்

No comments: