Friday, September 09, 2005

உனக்காக இளமையோடு காத்திருப்பேன்

மாலைப் பொழுதில்
கதிரவன் கடலுக்குள் மூழ்கும் போது
அவள் பாதங்களுடன் கடல் அலைகள் விளையாட
பாதங்களில் இருந்த கொலுசு சத்தமிட்டன

அந்த இனிமையான சத்தத்தில்
என் மனதில் ஒளி வட்டம் தோண்றியது

பெண்ணே
வாடிய பூவுக்குள் ஒரு வசந்தமேஉருவாக்கினாய்

இதமாக இதயத்தில் புகுந்து
இனிமையான மொழிகள் பேசி
குளிர்ச்சியான அன்பை தந்து
என் இதயத்தை வளர்ச்சி அடையவைத்தாய்

என்னை நானும் மறந்து
இன்பத்தில் அன்ன நடை பயின்றேன்

நிறைந்திட்ட அன்பை தந்து
இறுதியில் நீ..... மாறியதேனோ

இதயமான உதய நிலவே
உனக்காக இளமையோடு...
உன் பாதம்காணும் வரை
காத்திருப்பேன்......

No comments: